Wednesday, May 25, 2005

இஸ்லாம் குறித்த விவாதங்கள்!

இஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. 'இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா?' என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. நான் மார்க்க அறிஞனல்ல என்றாலும், நானறிந்த வரையில் ஒரு சிறு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன். யாரையும் பழிப்பதோ, குத்திக்காட்டுவதோ என் நோக்கமல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

விமரிசனம் என்பது இஸ்லாத்திற்கு புதியது அல்ல. நபிகளாரின் காலத்திலிருந்தே அது கடுமையான கண்டனங்களையும் விமரிசனங்களையும் சந்தித்தே வந்திருகிறது. அவற்றிற்கான தக்க பதில்களும் விளக்கங்களும் அவ்வப்போது அளிக்கப்பட்டும் வந்துள்ளன. ஒருவகையில் இஸ்லாம் இத்தகைய விமரிசனங்களை வரவேற்கிறது என்று கூட சொல்லலாம். எனவே, இஸ்லாத்தை குறித்து யார் வேண்டுமானாலும் விமரிசனம் செய்யலாம். விவாதம் ஆரோக்கியமானதாக நடைபெற கீழ்க்கண்ட சில அடிப்படைகளை புரிந்து மனதில் இறுத்திக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

1. முதலில் ஒரு ஸென் கதையைப்பார்ப்போம்: ( நன்றி: கங்காவின் 'தினம் ஒரு ஸென் கதை)

"கோப்பையை காலி செய்"
ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் சிறந்த ஸென் துறவியை சந்திந்து அவரிடம் ஞானம் பற்றி தெளிவு பெறுவதற்காக சென்றார். துறவி அமைதியாக தேனீரினை கோப்பையில் ஊற்றிக் கொண்டு இருந்த போது, பேராசிரியர் ஸென் புத்த மதத்தை பற்றியும் தியானம் பற்றியும் தனக்கு தெரிந்ததை பற்றி வலவல வென்று பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியரின் கோப்பையின் விளிம்பு வரை தேனீர் ஊற்றிக் கொண்டு இருந்த துறவி, நிறுத்தாமல் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பையில் இருந்து வழியும் தேனீரை கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர், ஒரு நிலைக்கு மேல் பொறுக்காமல் "கோப்பை நிறம்பி விட்டது. இதற்கு மேல் அதில் இடம் இல்லை" என்றார். அதற்கு துறவி "நீயும் இந்த கோப்பை போல் தான்", "நீ எப்போழுது உனது கோப்பையை காலி செய்து இடம் வைக்கிறாயோ, அப்போது தான் உனக்கு ஞானம் பற்றி என்னால் கூற முடியும்" என்றார்.

ஆக, இஸ்லாம் பற்றி நன்கு விளங்கிக்கொள்ள விரும்பும் நண்பர்கள் முதலில் தங்கள் கோப்பைகளை காலி செய்து கொள்வது நல்லது. விவாதத்தின்போது வெளிப்படும் புதிய கருத்துக்கள், புதிய கோணங்கள், புதிய விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மனதில் இடம் வேண்டுமல்லவா?

2. விவாதத்தின் கருப்பொருள்:

இஸ்லாத்தின் கருத்துக்களோடு முஸ்லிம்களின் சொல், செயல் ஆகியவற்றை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நடைமுறையில் முஸ்லிம்களின் சொல், செயல் அனைத்தும் எல்லா நேரங்களிலும் இஸ்லாத்தின் அடிப்படைகளை சார்ந்து இருப்பதில்லை. இது ஒரு கசப்பான உண்மை. பின்லாடனாக இருந்தாலும், கொமைனியாக இருந்தாலும், நாகூர் ரூமியாக இருந்தாலும், நானாக இருந்தாலும் இந்த நிலைதான். இறைத்தூதர்கள் மட்டுமே இதில் விதிவிலக்கானவர்கள். நபிகளாரின் சொல் செயல் அனைத்துமே இஸ்லாமாக இருந்தது.

ஆக, விவாதிக்கப்படும் பொருள் இஸ்லாத்தின் கருத்தா அல்லது முஸ்லிம்களின் சொல், செயல்பாடுகளா என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.

3. ஆதாரம் ப்ளீஸ்..

இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும்தான். எனவே உங்கள் சந்தேகங்களை முடிந்தவரை ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள். குர்ஆன் வசனங்களை யாராவது உங்களுக்கு தவறாக விளக்கி இருக்கலாம். ஹதீஸ் என நீங்கள் நம்பி இருந்த ஒரு செய்தி வெறும் கட்டுக்கதையாக இருக்கலாம். அதனால், 'நான் ஆதாரம் காட்டினால் நீங்கள் இஸ்லாத்தை விட்டு விலக தயாரா?' என்பது போன்ற சவால்களை தவிர்க்கவும்.

'முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்' என்பது போன்ற பொதுப்படையான வாக்கியங்களையும் (generalised statements) தவிர்க்கவும். இத்தகைய விவாதங்களுக்கு முடிவென்பதே கிடையாது.

4. விளக்கம் கிடைக்க தாமதமாகலாம்:

பொதுவாக இஸ்லாத்தை வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும் கேள்விகளும் சந்தேகங்களும் முஸ்லிம்களுக்கு தோன்றுவதில்லை. அவற்றிற்கான விளக்கங்களும் அவர்களிடம் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை. அத்தகைய கேள்விகளை எதிர் நோக்கும் முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்படாமல் மார்க்க நூற்களையும் மார்க்க அறிஞர்களையும் அணுகி தக்க விளக்கம் பெற்று பதிலளிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதனால், நீங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு தக்க விளக்கம் கிடைக்க தாமதமாகலாம். ஆனால் இஸ்லாத்தில் அத்தகைய கேள்விகளுக்கு பதிலில்லை என்ற முடிவுக்கு வந்து விட வேண்டாம்.

5. முகமூடிகள் ஜாக்கிரதை:

இணையத்தில் நிறைய முகமூடிகள் உலவுகின்றனர். இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புபவர்களும் அவர்களுள் இருக்கலாம். அதனால் பெயரை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட வேண்டாம். அத்தகையோர் வெளிப்படுத்தும் கருத்துக்களை சற்று உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.

ஆகவே, வாருங்கள் நண்பர்களே! ஒன்று சேர்ந்து இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம்!

60 comments:

Salahuddin said...

நன்றி இஸ்மாயில், நேரம் கிடைக்கும்போது சவுத் பிரிட்ஜ் ரோடு ஜாமிஆ சூலியாவிற்கு வாங்களேன், சந்திக்கலாம்.

-சலாஹுத்தீன்

பாபு said...

Appreciating you for a timely article.
Yes! Anybody wishes to discuss for anything they have to clearout their mind as mentioned in the zen story.

The nesakumars and other critics are entirely filled with hatred only and that also against Islam only - already in their thoughts and it reflects in their wordings.

We Should not forget that nandalaalaa's are having equal views on bothsides and they are more welcomeable for decent debates, though there are some false informations from them.

See some hindutva's are vulgarly attacking iSlamic personnels and nobody come forward to condemn it.

When Kaanchi film personally hits out Hindu personnels (even with evidence of recent matters), it seems to be these fanatics has no option expcept to attack ISlam with unlawful and vulgar means.

Salahuddin said...

Babu,

Thanks for your comments. Baseless arguments will not be welcome by anyone. To entertain them is merely waste of time. At the same time muslims must be prepared to engage in healthy debates and discussions about Islam. I personally see this as a learning experience.

- Salahuddin

நல்லடியார் said...

சல்மான் ருஷ்டி, தஸ்லீமா மற்றும் பலர் எழுதிய படைப்புகளெல்லாம் அவர்களை பிரபலப்படுத்தவில்லை. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தூற்றியபோது 'கெளரவ சிடிசன்சிப்' கொடுக்க மேலை நாடுகள் போட்டி போட்டன. மாறாக ஏனைய மதங்களை விமரிசிப்பவர்களுக்கு முஸ்லிம் உலகில் அங்கீகாரம் கொடுப்பதில்லை என்பதுதான் இஸ்லாத்திற்கும் ஏனைய மதவெறியர்களுக்கும் உள்ள வேறுபாடு. (பார்க்க: குறுகிய காலத்தில் பிரபலமாவது எப்படி?)

ஆரோக்கியம், நேசகுமார் போன்றோர் நிச்சயமாக ஒரு குழுவாக திட்டமிட்டு இஸ்லாத்தை தூற்றுகிறார்கள். அதற்குதான் 'தாரகை' பட்டங்கள்.

இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் வைக்கப்படும் போது இன்றைய முஸ்லிம்களில் உதாரணம் இல்லாமல் போனது நமது துரதிஷ்டம். குர்ஆன், ஹதீஸ் வழியில் தெளிவு படுத்த முயன்றாலும் கட்டுக்கதைகள், இக்காலத்திற்கு ஏற்றவையல்ல என ஒதுக்கும் பாரபட்சம்.

பழுத்த மரம்தான் கல்லடி படும் என்பது நடுநிலையாளர்களுக்கு தெரியும். ஆக, இஸ்லாத்தின் மீதான் அவதூறுகளால் தங்கள் மூட கொள்கைகளுக்கு மருந்திட்டுக் கொள்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் நடு நிலையாக எழுதுவோம்.

Salahuddin said...

//பழுத்த மரம்தான் கல்லடி படும் //

உண்மையான வார்த்தைகள்!

இறைநேசன் said...

மிகவும் அவசியமான பதிவு இது. வாழ்த்துக்கள்.

Salahuddin said...

Dear Wichita,

//Why is that women are barred from voting in some countries ruled in the name of islam.is it in conformity with islam.//

As far as I know, there are no restrictions in Islam barring women from voting. But I have no ready answer to your question,'Why is that women are barred from voting in some countries ruled in the name of islam'. Please also consider my comment: நடைமுறையில் முஸ்லிம்களின் சொல், செயல் அனைத்தும் எல்லா நேரங்களிலும் இஸ்லாத்தின் அடிப்படைகளை சார்ந்து இருப்பதில்லை. இது ஒரு கசப்பான உண்மை.

In muslim countries such as Pakistan, Indonesia & Malaysia, muslim women have been prime ministers and ministers.

Salahuddin said...

Thanks Wichita,

Because of your question I learnt something new. This is what I found:

"The Qur’an has prescribed the following principle in deciding about issues related to the collective affairs of the Muslims:

“Their (Muslim’s) affairs are decided through consultation among them” (Al-Shu’ra’ 42: 38)

One of the most important corollary of the above directive is that in all such collective issues where there is a difference of opinion among the Muslims because of which a unanimous decision cannot be arrived at, the opinion of the majority of the Muslims shall be made the collective law in a Muslim state.

As far as the issue of “voting rights” is concerned, the Qur’an in the same verse (Al-Shu’ra’ 42: 38) has clearly given the right of participating in the referred consultation to all Muslim citizens irrespective of the gender.

it is quite obvious that the Qur’an does not deprive women of voting rights. During the times of the Prophet and those that immediately followed, women normally stayed away from issues related to the state or those related to other collective issues. Thus, the issue of women’s voting rights never arose in those times. In contrast, today’s women, with their wider exposure have not only become more interested in political and collective issues but have also become active in these spheres. In these circumstances, there seems to be no basis of saying that Islam does not give voting rights to women."

Excerpts from: http://www.understanding-islam.com/rs/s-052.htm

- Salahuddin

இளவெண்ணிலா said...

தன்னைத் தானே நக்கிக் கொள்ளும் நாய்கள்....

Salahuddin said...

புலிப்பாண்டி தன் சுய அறிமுகத்தை ஏன் இங்கே பதிந்திருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை!

நல்லடியார் said...

மிருக ஜாதியைச் சார்ந்த 'புலி' பாண்டியை இனி புலி பன்டி (பன்றி) என்றழைப்போம்.

Salahuddin said...

இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை. இஸ்லாத்திற்கும் மற்ற மதங்களுக்கும் கொள்கையளவில் பெரும் வேறுபாடுகள் உண்டு. மற்ற மதங்களின் பெரும்பாலான கொள்கைகள் இஸ்லாத்திற்கு ஏற்புடையது அல்ல என்பதால், அது மற்ற மதங்களை மதிப்பதில்லை என்று ஆகாது. தன்னை சந்திக்க வந்த ஒரு கிருஸ்துவ பாதிரியார் வழிபாடு செய்ய தனது பள்ளி வாசலிலேயே நபிகள் நாயகம் அவர்கள் இடம் ஒதுக்கி தந்திருக்கிறார்கள்.

- சலாஹுத்தீன்

contivity said...

சலாஹுத்தீன்,

ராஜின் கருத்தையே பிரதிபலிக்கிறேன். நேச குமார், ஆரோக்கியம், இப்போது புதிதாக புலிப்பாண்டி, ஈரோடு இவர்கள் அறிய வேண்டியது என்னவென்றால், 1400 ஆண்டுகளுக்கும் மேலாக பலருடைய சொல்லடிகளையும் விமர்சனங்களையும் தாங்கி அதற்கு தகுந்த பதில்களையும் தந்து வளர்ந்தது தான் இஸ்லாமிய மார்க்கம். உங்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்கு இறைவேதம் மற்றும் நபிவழியில் விடையிறுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்.. உங்களில் எத்தனை பேர் நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளீர்?

பாபு said...

//கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ அல்லது இந்துக்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ இஸ்லாமியர்கள் தங்கள் மதநெறி அடிப்படையில் வாழ்வதற்கோ அல்லது ஒரு மசூதியைக்கட்டுவதற்கோ எந்தவிதத் தடங்கலுமில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டில் மற்றைய மதத்தோருக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே. உதாரணத்துக்கு சில அரேபிய நாடுகளுக்கு எங்கள் மத அடையாளங்களுடன் போகமுடியாது//


இவையெல்லாம் ஒரு நாட்டின் அரசியலமைப்புக்கு காரணப்பட்டது என்று நினைக்கிறேன்.
துபாய் மற்றும் அல்பேனியா போன்ற முஸ்லிம் பெரும்பான்மையான நாடுகளில் சர்ச்சுகளும் கோவில்களும் உள்ளன.
அந்நாட்டின் அரசியலாளர்களால் தீர்மானிக்கப்படுகிற மதச்சார்பு தன்மையை பொறுத்தவை அவை.
ஆனால் மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டே ஒரு மசூதியை இடித்திருக்கிறோம் நாம்.

G.Ragavan said...

நல்ல திரிதான். ஒரு மதத்தைப் பற்றி விளக்கும் நேர்மையான திரியாக இது திகழ எனது வாழ்த்துகள்.

இஸ்லாத்தைப் பற்றி எனக்கு நிறைய தெரியாது. ஆகையால் கேட்பதற்கும் ஒன்றுமில்லை.

இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பு மிகுந்த வருத்தத்திற்குரியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கண்டிப்பாக நடுநிலையாளர்கள் இத்தகைய நிகழ்வுகளை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். குரல் எழுப்பினார்கள். இன்னும் எழுப்புவார்கள்.

ஆனால் பொதுவாகவே இஸ்லாத் மீது உலகளாவிய அளவில் ஒரு தீவிரவாதத் தோற்றம் இருப்பது உண்மைதான். அது எவ்வளவு தூரம் சரியென்று என்னால் சொல்ல முடியவில்லை.

ஆனால் ஒரு ஐயமுண்டு. ஆஃப்கானிஸ்தானில் பாமியன் புத்தர்களை இடித்தது பற்றி. அது எதனால் அப்படி? காரணம் ஒரு அரசாங்கமே அப்படிச் செய்தது! அது குறித்து மற்றைய முஸ்லீம்களின் நிலை என்ன?

அன்புடன்,
கோ.இராகவன்

Salahuddin said...

இளையவரே! (வேற யாரையோ அழைக்கிற மாதிரி இருக்கே, பரவாயில்லையா?)

//இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டில் மற்றைய மதத்தோருக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே. உதாரணத்துக்கு சில அரேபிய நாடுகளுக்கு எங்கள் மத அடையாளங்களுடன் போகமுடியாது.//

இத்தகைய அரசியலமைப்பு தொடர்பான விஷயங்களை விளக்கும் அளவுக்கு நான் அறிந்தவனல்ல. ஒரு சில கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்டி உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

- நீங்கள் குறிப்பிடும் இஸ்லாமிய நாடுகள் அங்கு பணிபுரிய வருவோரிடையே எந்த மத வேறுபாடும் காட்டுவதில்லை. சவுதி அரேபியா போன்ற நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தாலும் திறமையின் அடிப்படையில் உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். மற்ற மதத்தினரின் உரிமைகளை மறுக்கும் நாடு என்றால், 'முஸ்லிம்கள் மட்டும்தான் இங்கு பணி புரிய அனுமதி உண்டு' என்று சொல்லியிருக்கலாமே!

- உரிமைகளைப்பற்றி பேசும்போது, நமது தாய் நாட்டு குடிமக்கள் என்ற முறையில் பெறும் உரிமைகளுக்கும், வேறொரு நாட்டிற்கு பணியாற்ற செல்லும்போது அங்கு பெறும் உரிமைகளுக்கும் வித்தியாசமுண்டு என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

சலாஹுத்தீன்

Salahuddin said...

ராகவன், உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி!

//ஆஃப்கானிஸ்தானில் பாமியன் புத்தர்களை இடித்தது பற்றி. அது எதனால் அப்படி? காரணம் ஒரு அரசாங்கமே அப்படிச் செய்தது! அது குறித்து மற்றைய முஸ்லீம்களின் நிலை என்ன?//

நல்ல கேள்வி இது. ஆஃப்கானிஸ்தானின் அப்போதைய தலிபான் அரசு புத்தர் சிலைகளை இடித்தது வருத்தத்திற்குறிய ஒரு செயல்தான். பிறர் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றை ஏசாதீர்கள் என்று கட்டளையிடும் இஸ்லாம், அவர்கள் வணங்கும் புத்தர் சிலை போன்றவற்றை இடிக்கச் சொல்லியிருக்குமா? பிற சமூகத்தினருடன் இணக்கத்துடன் வாழும்படி இஸ்லாம் வலியுறுத்தியிருப்பதற்கு பல ஆதாரங்களை நாம் காட்ட முடியும்.

புத்தர் சிலை இடிப்பைப்பற்றி தலிபான் தலைவர் ஒருவர் கொடுத்திருந்த பேட்டியை இணையத்தில் படித்த ஞாபகம். (இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இங்கு குறிப்பிடுகிறேன். அவர் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது).

அவர் சொல்லியிருந்தார்: தலிபான் அரசு பதவியேற்ற பிறகு நாட்டிற்கு அப்போதைய அவசியத்தேவையானவற்றை பட்டியலிட்டு திட்டம் தீட்டிக்கொண்டிருந்த சமயம். கல்வி வளர்ச்சி அவற்றுள் ஒன்றாக இருந்தது. அரசு இந்த திட்டப்பணிகளை நிறைவேற்ற வெளி நாடுகளிலிருந்து நிதி உதவியை எதிர் பார்த்துக்கொண்டிருந்தது. அப்போது ஆஃப்கானிஸ்தான் வந்த வெளிநாட்டுக்குழு ஒன்று பல மில்லியன் டாலர் செலவில் புத்தர் சிலைகளை புணரமைக்க அனுமதி கேட்டது. அரசு அந்தப்பணத்தை கல்விப்பணிகளுக்காக தந்துதவும்படி கேட்டுக்கொண்டது. ஆனால் அந்த குழுவோ பிடிவாதமாக சிலைகளுக்காக மட்டுமே அந்த பணத்தை செலவு செய்ய முடியும் என்று கூறி மறுத்து விட்டது. இதனால் கோபமடைந்த தலிபான் அரசு சிலைகளை தகர்க்கும்படி உத்தரவிட்டது.

G.Ragavan said...

உங்கள் ஐயம் எனக்கும் வருகிறது. அந்த தாலிபான் அமைச்சர் சொல்லியிருப்பது ஒப்புக்காக இருக்கும். நாட்டு மக்கள் ஆதரவுக்காக இருக்கலாம். நம்மூரிலும் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் அல்லவா. குதிரை பேரத்திற்காக ஆட்சியைக் கலைத்தோம் என்று.

ஆனாலும் அது துன்பியல் நிகழ்ச்சி என்பதில் ஐயமில்லை.

எனக்கு மற்றொரு ஐயம். பொதுவாகவே நம்மூரில் ஒரு பேச்சுண்டு. இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடந்தால் இந்துக்கள் இந்தியாவிற்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் ஆதரவு அளிப்பார்கள் என்பதே அது. எனக்கு முஸ்லீம் நண்பர்கள் இல்லை. இருந்திருந்தால் அவர்களிடம் கேட்டிருப்பேன். இங்கே பெங்களூரில் பாகிஸ்தான் ஜெயித்த போது பட்டாசு வெடித்த ஓரிரு சமயங்களும் உண்டு.

நான் கேட்க வருவது...பாகிஸ்தானைப் பொருத்தவரைக்கும் இந்திய முஸ்லீம்கள் என்ன நினைக்கின்றார்கள்? காஷ்மீர் விவகாரத்தில் அவர்களது நிலையென்ன?

நல்லடியார் said...

ராகவன்,

பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடும் போது அதற்கு ஆதரவு செய்யும் இந்தியர்களை மதவாத, தேச துரோக முத்திரை குத்துவது நிச்சயமாக பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்பதால்தான்.

அதே நாம், இலங்கைக்கோ அல்லது தென் ஆப்பிரிக்காவுக்கோ ஆதரவாக பேசினால் அவர்களை யாரும் ஒன்றும் சொல்வதில்லை.

விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் மதங்களுக்கு எதிரான போட்டியாக்கியது யார்?

பாகிஸ்தானை இந்தியாவிலிருந்து பிரித்ததே தவறு என்பது எனது கருத்து. மேலும் அவர்களுடன் பிரிந்து சென்ற முன்னாள் கிழக்கு பாகிஸ்தானியர்களை அவர்கள் பாகிஸ்தானியராகவே பார்க்கவில்லை. விளைவு பங்களாதேஷ் தோற்றம்.

பர்தாவை அணிவதா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டியது பெண்கள். அதை திணிப்பது பெண்ணடிமை என்று சில மேதாவிகள் சொல்கிறார்கள். அதே கண்ணோட்டம் காஷ்மீரிகளுக்கும் பொறுந்தும்தானே. இந்தியாவுடன் இருப்பதா அல்லது காஷ்மீருடன் இருப்பதா என முடிவு செய்ய வேண்டியது அம்மாநில மக்கள் தான் என்பது எனது கருத்து.

இந்தியாவின் எந்த மாநிலமும் இந்தியாவிலிருந்து விலகக் கூடாது என்பதே எனது அவா.

Salahuddin said...

//பாகிஸ்தானைப் பொருத்தவரைக்கும் இந்திய முஸ்லீம்கள் என்ன நினைக்கின்றார்கள்? காஷ்மீர் விவகாரத்தில் அவர்களது நிலையென்ன?//

ராகவன்,

ஒரு இந்திய முஸ்லிம் என்ற வகையில் எனது கருத்தை சொல்கிறேன். பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களின் கருத்தும் இவ்வாறுதான் இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கிடையேயான ஒரு அரசியல் பிரச்னை. மதம் இங்கு எந்த வகையிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை. இந்த பிரச்னையில் எந்த முடிவு இந்தியாவிற்கு அனுகூலமாக இருக்குமோ அதைத்தான் நான் விரும்புவேன். பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு என்பதால் இந்திய முஸ்லிம்களெல்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதெல்லாம் தவறான, அடிப்படையற்ற வாதம். அப்படியானால் இரண்டு முஸ்லிம் நாடுகளுக்கிடையில் (ஈராக், குவைத்திற்கிடையில் ஏற்பட்டதுபோல..) பிரச்னை தோன்றினால் அந்த நாட்டு முஸ்லிம்கள் எந்த நாட்டை ஆதரிப்பார்கள்?

G.Ragavan said...

// பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடும் போது அதற்கு ஆதரவு செய்யும் இந்தியர்களை மதவாத, தேச துரோக முத்திரை குத்துவது நிச்சயமாக பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்பதால்தான். //

இருக்கலாம் நல்லடியார். எனக்கும் கிரிக்கெட்டும் ஏழாம் பொருத்தம். ஆனால் என்னுடைய ஆவல் இந்தியா வெற்றி பெற வேண்டுமென்று இருந்தாலும், நன்றாக விளையாடுகின்றவர் வெற்றி பெறுவார்கள் என்பது நான் ஏற்றுக் கொண்ட பட்ட ஒன்று. விரும்பிய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் உரிமை யாருக்கும் உண்டு.

// விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் மதங்களுக்கு எதிரான போட்டியாக்கியது யார்? //
இந்த விஷயத்தில் இரண்டு பக்கத்திலும் தவறு நடக்கிறது என்பதே எனது கருத்து. விளையாட்டை மைதானத்திலேயே விட்டுவிட வேண்டும். மைதுனம் வரை வந்தால் கந்தல்தான் மிஞ்சும்.

// பர்தாவை அணிவதா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டியது பெண்கள். அதை திணிப்பது பெண்ணடிமை என்று சில மேதாவிகள் சொல்கிறார்கள். அதே கண்ணோட்டம் காஷ்மீரிகளுக்கும் பொறுந்தும்தானே. //
இந்தக் கருத்தில் எனக்கு முழு சம்மதம் உண்டு. பர்தா விஷயத்திலும் சரி. காஷ்மீர் விஷயத்திலும் சரி. உங்களுக்கு முதல் விஷயத்தில் இல்லை என்று புரிகிறது. இதைப் பற்றி வேறொரு திரியில் கருத்திட்ட நினைவு. என்னைப் பொருத்த வரையில் இருக்கும் தட்ப வெட்ப நிலைக்குத் தக்க உடைகளை விரும்பிய விதத்தில் நாகரீகமாக அணிந்து கொள்ளும் உரிமை எந்தப் பெண்ணுக்கும் உண்டு. அதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஹி ஹி நீங்கள் பாராட்டும் மேதாவிகளில் நானும் ஒருவன்.

G.Ragavan said...

சலாஹுதீன், என்னுடைய கேள்விகளை அறியாமையின் வினாக்கள் என்றே எடுத்துக் கொண்டு விடை சொல்கின்றீர்கள். மிக்க நன்றி. தெரிந்து கொள்வதற்காகக் கேட்பதுதான் எல்லாம். கேட்டால்தானே தெரியும்.

பாகிஸ்தான் இந்தியா பிரிவினை வெறும் அரசியல் பிரச்சனைதான். அதில் மதம் புகுந்து சீரழித்து விட்டது. என்ன செய்ய? இன்றைக்கு ஒருத்தரையொருத்தர் வெறுக்கும் நிலை.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இதை அனைவரும் உணர வேண்டும். ஆனால் கூடி வாழ்வதும் நான் உமி கொண்டு வருகிறேன். நீ அவுல் கொண்டு வா. இருவரும் ஊதி ஊதித் தின்போம் என்று இருக்கக் கூடாது.

இரண்டு முஸ்லீம் நாடுகளுக்கிடையே போர் என்று சொன்னீர்கள் அல்லவா. கிட்டத்தட்ட அப்படிப்பட்ட சூழ்நிலை ஆஸ்திரியாவிற்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்டது. ஜெர்மனி மிகவும் இலகுவாக ஆஸ்திரியாவை வழிக்குக் கொண்டு வர...பல ஆஸ்திரியர்கள் வருத்தம் மட்டுமே கொள்ள முடிந்தது. Sound of Music என்ற திரைப்படம் இதைப் பின்னணியாக வைத்து வந்தது. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? அடடா! என்ன அருமையான இசைக் கோர்ப்பு.

சரி. இன்னொரு கேள்வி. இப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது. இந்த தலாக் பற்றி நிறையப் புகார்கள் வருகின்றனவே. ஆண்களால் தலாக்க பெண்ணின் அனுமதி தேவையில்லை. ஆனால் பெண்கள் விலகி வாழ ஆண் அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதாமே. உண்மையா? எதற்காக அப்படி ஒரு சட்டம்?

அபூ முஹை said...

சரி. இன்னொரு கேள்வி. இப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது. இந்த தலாக் பற்றி நிறையப் புகார்கள் வருகின்றனவே. ஆண்களால் தலாக்க பெண்ணின் அனுமதி தேவையில்லை. ஆனால் பெண்கள் விலகி வாழ ஆண் அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதாமே. உண்மையா? எதற்காக அப்படி ஒரு சட்டம்?

ராகவன் அவர்களுக்கு!
மிக அவசியமாகத் தொழிலில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் கணனியின் தொடர்பு மிகக் குறைந்து எழுத்துப்பணி மிகவும் சுணங்கி விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் பழைய நிலையில் மீண்டும், தொடர்ந்து எழுத முடியும் என்று கருதுகிறேன் (இறைவன் நாடட்டும்)

இஸ்லாத்தில் பெண்களின் விவாகரத்து உரிமை பற்றி தலாக் ஓர் விளக்கம் என்ற அடுத்த பதிவில் உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும். பெண்கள் விலகி வாழா ஆண்கள் அனுமதிக்க வேண்டும் என்பது தவறான புரிதலே தவிர அந்த நிலை இஸ்லாத்தில் இல்லை. தலாக் - விவாகரத்துச் செய்யும் முறையில் (கணவன், மனைவி) இருவருக்குமிடையில் வித்தியாசங்கள் இருக்கிறது - உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை.

G.Ragavan said...

கண்டிப்பாக அபு முஹை.. நீங்கள் விரைவில் எழுத வேண்டும். இறைவன் அருள் புரியட்டும். ஆனாலும் பணி பெரிது. அதற்குத்தான் முன்னுரிமை.

உங்கள் விளங்கங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

நல்லடியார் said...
This comment has been removed by a blog administrator.
நல்லடியார் said...

அன்பின் ராகவன்,

கருப்பு துணியால் உடலை போர்த்தி முஸ்லிம் பெண்களெல்லாம் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு பிரமையே. உண்மையில் தனக்கு தோதான துணிகளில்தான் 'பர்தா' அணிந்து சாதாரணமாக இதர பெண்களைப் போல்தான் இருக்கிறார்கள். வேண்டுமென்றால் உங்கள் வீட்டுப் பெண்களை விட்டு ஏதாவது முஸ்லிம் பெண்ணிடம் கேட்டுப் பார்க்க சொல்லுங்கள். அவர்களும் இதைத்தான் சொல்வார்கள்.

சரிகைப்பட்டு துணிகளால் கிடைக்கும் அசெளகரியத்தை விட 'பர்தா' வினால் இல்லை என்பதுதான் உண்மை. இஸ்லாம் பெண்களுக்கு 'வாழ்க்கைக்கு' அவசியமான எல்லா உரிமைகளையும் வழங்கியுள்ளது. ஒரு சில முஸ்லிம்கள் அவற்றை பெண்களின் மீது கடுமையாக சுமத்துகிறார்கள் அல்லது அத்தகைய முஸ்லிம் பெண்கள் தங்கள் உரிமை எது என அறியாமல் இருக்கிறார்கள். என்பதே அத்தகைய குற்றச் சாட்டுகளுக்கு காரணம்.

எங்களுக்கும் சகோதரிகளும், மணைவி, தாய் உண்டுதானே. என்னமோ முஸ்லிம்களெல்லாம் கல் நெஞ்சக் காரர்கள் போல் சித்தரிக்கப் படுகிறார்கள். 'பெண்ணுரிமை ஒரு இஸ்லாமிய பார்வை' என எழுதிவரும் தொடரை என் பதிவில் படிக்கிறீர்களா? மறக்காமல் கருத்திடவும்.

பாபு said...

Dear All,
யார் மனமும் புண்படாமல் இங்கு விவாதம் சுமூகமாகச் செல்வதைப் பார்க்கிறேன். மகிழ்ச்சி.
ஒரு வேளை 'நேசமா'க வந்து (இஸ்லாம் மீது மட்டும்) வெறுப்பை கக்குபவர்களும் 'ஆரோக்கியமா'க வந்து அழுக்கைத் திணிப்பவர்களும் வராததால் இருக்கலாம்.

விவாதம் என்று வரும் போது உள்ளதை உள்ளபடி (வார்த்தை விளையாட்டு செய்யாமல்) அழகுற மொழிந்தால் எல்லோரும் நிறையத் தெரிந்துக்கொள்ளலாம். நட்பும் வளரும்.

பாபு said...

//ஆனால் பொதுவாகவே இஸ்லாத் மீது உலகளாவிய அளவில் ஒரு தீவிரவாதத் தோற்றம் இருப்பது உண்மைதான். அது எவ்வளவு தூரம் சரியென்று என்னால் சொல்ல முடியவில்லை.//

ராகவன் அண்ணாவின் கருத்து சிந்தனையைத் தூண்டுகிறது.

தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவரவர் மதத்துக்கே இழுக்கு சேர்க்கிறார்கள் என்பதே உண்மை.
அது பின் லேடனோ புஷ்ஷோ மோடியோ பால் தாக்கரேயோ யாராக இருந்தாலும் சரி.

(ஆனால் பின்லேடன்களை காட்டியே ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஓரங்கட்டவும் மாபெரும் இஸ்லாம் மார்க்கத்தை குற்றஞ்சாட்டவும் மகிழ்வுடன் முன்வருகிறன ஃபாசிச சக்திகள்)

நம்மில் பலருக்கும் பின்லேடன் பயங்கரவாதியாக தெரிகிற அளவுக்கு 'மோடி'களும் 'தாக்கரே'க்களும் தெரிவதில்லை. காரணம் ஜனநாயகத் திரையைத் துளைத்துச் செல்லும் சக்தி 'பார்வைகளுக்கு' இல்லை.

Salahuddin said...

ராகவன்,

Sound of Music பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. இங்கு கிடைக்கிறதாவென அவசியம் தேடிப்பார்க்கிறேன்.

உங்கள் கேள்விகளை தயங்காமல் இங்கு முன் வையுங்கள். உங்களுக்கு பதிலளிக்கும் சாக்கிலாவது நாங்களும் இஸ்லாத்தைப்பற்றி நன்கு தெரிந்து கொள்கிறோம். விளக்கங்கள் அளித்துவரும் அபூமுஹை மற்றும் நல்லடியாருக்கு நன்றிகள்!

ஜாபர் (சபாமர்வா), babu, pakru, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

- சலாஹுத்தீன்

G.Ragavan said...

// தலாக் - விவாகரத்துச் செய்யும் முறையில் (கணவன், மனைவி) இருவருக்குமிடையில் வித்தியாசங்கள் இருக்கிறது - உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை. //

அபுமுஹை, ஒரு ஆண் திருமண ரத்திற்கு தலாக் சொல்கின்றார்கள். பெண்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

திருமணமான முஸ்லீம் பெண்கள் திருமண ரத்திற்கு நீதிமன்றத்தை நாடலாமா?

// எங்களுக்கும் சகோதரிகளும், மணைவி, தாய் உண்டுதானே. என்னமோ முஸ்லிம்களெல்லாம் கல் நெஞ்சக் காரர்கள் போல் சித்தரிக்கப் படுகிறார்கள். 'பெண்ணுரிமை ஒரு இஸ்லாமிய பார்வை' என எழுதிவரும் தொடரை என் பதிவில் படிக்கிறீர்களா? மறக்காமல் கருத்திடவும். //

நல்லடியார், அந்தத் தொடரை இன்னும் படிக்கவில்லை. படித்து விட்டு கருத்திடுகிறேன். நன்றி.

பாபு said...

Dear Raghavan,

please read http://abumuhai.blogspot.com/2005/06/2.html
ABUMUHAI clearly explained the queries on divorces of muslim couples

G.Ragavan said...

சுட்டிக்கு மிக்க நன்றி பாபு.

பெண்களுக்கும் அந்த உரிமை இருப்பது குறித்து மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு ஐயம். பெண்கள் குலா செய்ய விரும்பி தலைவரை (நீங்கள் இவருக்குக் கொடுத்த பெயர் மறந்து விட்டது. மன்னிக்கவும்.) சந்தித்து முறையிட்டால் நடக்கும். சரி. ஒருவேளை அந்தத் தலைவர் ஒத்துக் கொள்ளாவிட்டால்? ஒருவேளை அந்தப் பெண்ணால் அந்தத் தொகையை (திருமணத்தின் போது பெற்றது) கொடுக்க முடியாவிட்டால்?

ஆணும் தன்னிச்சையாக தலாக் செய்யாமல், அவரும் அக்குறிப்பிட்டவரின் வழியாகவே செய்ய வேண்டுமென்று இருந்தால் சரியாக இருக்குமெனப் படுகிறது. இது எனது கருத்து அவ்வளவே.

அன்புடன்,
கோ.இராகவன்

பாபு said...

I think there is a good answer for Br.Raghavan's queries. Salahuddin or Abumuhai can explain better.

அபூ முஹை said...

சலாஹுத்தீன் அவர்கள் பெயர்தான் முதலில், ராகவன் அவர்களின் சந்தேகங்களுக்கு அவரே விளக்கமளிக்க வேண்டும். நான் இடையில் சேர்ந்து கொள்கிறேன், நன்றி

contivity said...

திரு விச்சு அவர்கள் தன்னுடைய பதிவில் இஸ்லாம் குறித்த சில சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரையில் சிறு விளக்கங்களை அளித்து இருக்கிறேன். என் விளக்கங்களில் பிழை இருப்பின் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
நான் மார்க்க அறிஞன் அல்லன்.
நன்றி

அபூ முஹை said...

சரி, ராகவன் அவர்களின் சந்தேக வினாக்களுக்கு நாமே விளக்கமிளிப்போம்.

//*ஒரு ஆண் திருமண ரத்திற்கு தலாக் சொல்கின்றார்கள். பெண்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்?*//

முதலிரண்டு முறை தலாக் சொல்லும் தவணைகளில் தலாக் சொல்லப்பட்டப் பெண்கள் மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும்வரைக் காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புபவர்களாக இருந்தால் அப்பெண்கள் - தங்கள் கர்ப்ப அறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை - குழந்தை உருவான விஷயத்தை மறைக்க அவர்களுக்கு அனுமதி இல்லை. அவர்களின் கணவர்கள் இந்தக் கெடுவுக்குள் தலாக் விடப்பட்டப் பெண்களை திரும்ப அழைத்துக் கொள்ளலாம். இது 2:228 குர்ஆன் வசனத்தின் கருத்தாகும்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் கருத்தரித்திருக்கிறார்களா என்பதை அறியவும், மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் காலவரையறைக்குள் கணவன், மனைவி இருவருக்கும் நல்லிணக்கம் ஏற்பட்டு மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம். இது முதல் இரண்டு தவணை தலாக் முறைக்கு மட்டுமே பொருந்தும்.

தலாக் சொல்லப்பட்டப் பெண்கள் இவ்வாறு காத்திருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

மற்ற சந்தேகங்களுக்கும் தொடர்ந்து விளக்கமளிப்போம் (இறைவன் நாடட்டும்) அதற்குமுன் ராகவன் அவர்கள் எழுதிய கருத்தோட்டத்தில் எனக்கு ஏற்படும் சந்தேகத்திற்கு விளக்கமளிக்கட்டும்.

//*ஆணும் தன்னிச்சையாக தலாக் செய்யாமல், அவரும் அக்குறிப்பிட்டவரின் வழியாகவே செய்ய வேண்டுமென்று இருந்தால் சரியாக இருக்குமெனப் படுகிறது. இது எனது கருத்து அவ்வளவே.*//

''அக்குறிப்பிட்டவரின் வழியாகவே செய்ய வேண்டுமென்று இருந்தால் சரியாக இருக்குமெனப் படுகிறது. சரியாக இருக்குமெனப் படுகிறது'' என்பதற்கு சரி, சரி இல்லை என்பதை எப்படிப் புரிய வேண்டுமென்பதற்கு ஒன்றிரண்டு உதாரணங்களைச் சொல்லுங்களேன் ராகவன்.

அன்புடன்,
அபூ முஹை

G.Ragavan said...

விளக்கங்களுக்கு நன்றி அபுமுஹை. நான் இதைப் பார்க்காமல் இருந்து விட்டேன். அதான் தாமதம்.

என்னுடைய கேள்வி என்னவென்றால்....ஒரு பெண் மணவிலக்கு கேட்கையில் ஒரு நடுவர் வழியாகச் செல்ல வேண்டியுள்ளது. அது சரியே. காரணம் எல்லாம் சரியாக நடக்கிறதா என்று பார்க்க ஒரு நடுவர் தேவை. (இந்துத் திருமண விலக்குகளில் நீதிமன்றம் நடுவராக இருப்பது போல).

அதே போல ஒரு ஆணும் தன்னிச்சையாக தலாக்காமல்...ஒரு நடுவர் வழியாகவே செய்வதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். இல்லையென்றால் இதை சிலர் துர்ப்பிரயோகம் செய்யவும் வழியுண்டு. ஆகையால் என்னுடைய கருத்துப் படி ஆணுக்கும் தன்னிச்சையாக தலாக்க உரிமை இருக்கக் கூடாது. நடுவர் வழியாகவே சாதக பாதகங்களை அலசிச் செல்ல வேண்டும். இதற்கு எதிராக இஸ்லாத் இருக்குமானால் அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அது தவறு என்றே எனக்குப் படுகிறது.

அடுத்த கேள்வி. ஒரு முஸ்லீம் பெண் மணவிலக்கிற்காக இந்திய நீதிமன்றங்களை நாடலாமா? அதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா?

அபூ முஹை said...

ராகவன், உங்களின் சந்தேக வினாக்களுக்கு முதலில் பதில் எழுதிவிடுகிறேன்!

1.//*ஒருவேளை அந்தத் தலைவர் ஒத்துக் கொள்ளாவிட்டால்?*// 2. //*திருமணமான முஸ்லீம் பெண்கள் திருமண ரத்திற்கு நீதிமன்றத்தை நாடலாமா?*// இந்த இருண்டு கேள்விகளுமே ஒன்றோடொன்று தொடர்புடையதுதான்.

ஒரு பெண் தன் கணவனைப் பிடிக்காமல், அவனிடமிருந்து முற்றாக விலகிவிட முடிவு செய்து அந்தச் செய்தியை ஊர்த் தலைவரிடம் முறையிட்டால் - அந்தப் பெண்ணின் விருப்பத்தை மறுத்து பலவந்தமாக அவளின் கணவனோடு வாழ்ந்தாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

இங்கே ஊர் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவளது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கருத்தை அப்பெண்ணின் மீது திணிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் இவர்கள் மீது திருக்குர்ஆன் மூன்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகிறது.

''எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பாளர்கள்தாம்.'' (5:44)

''எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள்.'' (5:45)

''அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.'' (5:47)

எனவே, ''தலைவர் ஒத்துக் கொள்ளாவிட்டால்?'' என்ற பேச்சுக்கே இடமில்லை. கணவனிடமிருந்து மணவிலக்கை விரும்பி, தலைவரிடம் ஒரு பெண் முறையிட்டால் அத்தலைவர் மறு பேச்சுக்கே இடமில்லாமல் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். இதுவே இஸ்லாத்தின் சட்டம்.

இச்சட்டத்தை முறைகேடாக ஒருவர் பயன்படுத்தினால் அது அவரின் அறிவில்லாத் தன்மையையே வெளிப்படுத்தும். ஒரு முஸ்லிம் செய்யும் முறைகேடான செயலை, சட்டத்தை நோக்கித் திருப்புவது அறிவுடைமையல்ல என்பதை விளங்க வேண்டும். (ஏற்கெனவே தலாக் ஓர் விளக்கம்-1 பதிவில் இதை நாம் எழுதியுள்ளோம்)

''குலா'' மூலம் மணவிலக்குப் பெறும் முயற்சியில் பெண்ணுக்கு அநீதம் இழைக்கப்பட்டால் அவர் தாராளமாக இந்திய நீதி மன்றங்களின் உதவியை நாடலாம். இதைக் கூடாது என்று சில அறிவிலிகள் கூறுவார்கள், இது நியாயமற்ற விதண்டா வாதம். குலா முறை விவாகரத்து இஸ்லாம் வழங்கிய பெண்களுக்கான உரிமை, இந்த உரிமையை மறுத்து நிராகரித்தவர்களுக்கெதிராவே நீதி மன்றத்தின் உதவியை நாடுகிறார்.

பெண்களுக்கான உரிமையை மறுத்தத் தனி நபரோ அல்லது சமுதாயமோ இவர்களே இஸ்லாத்தின் பார்வையில் கடுமையானக் குற்றவாளிகள். (எல்லா விஷயங்களையும் ஒரே பின்னூட்டத்தில் சொல்லாமல் தனித் தனியாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று கருதி இன்னும் இரண்டு பின்னூட்டங்களில் சொல்லமென்று எண்ணுகிறேன். நன்றி!)

அன்புடன்,
அபூ முஹை

G.Ragavan said...

நன்றி அபுமுஹை....ஆனால் உங்கள் கருத்துகள் எனக்கு முழுமையான விடையைத் தரவில்லை.

குலா மூலம் ஒரு பெண் விவாகரத்து கோரினால் மறுக்கப் படவே மாட்டாது என்று உறுதி கூறியுள்ளீர்கள். அப்படி மறுக்கப் பட்ட சமயத்தில் நீதி மன்றத்தை நாடினால் தவறில்லை என்றும் கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி.

ஆனால் தலாக் பற்றிய கேள்விக்கு ஒன்றும் சொல்லவில்லை. ஆகையால் அதில் பேச்சை வளர்க்காமல் எனது கருத்தைச் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.

குலா எவ்வகையில் செய்யப் படுகிறதோ. அதே வகையில்தான் தலாக்கும் செய்யப் பட வேண்டும். தன்னிச்சையாக எந்த ஆணும் தலாக் செய்யக் கூடாது. அப்படி இருந்தால்தான் என் கருத்துப் படி சரி. இல்லையென்றால் தவறுதான். குற்றம்தான்.

அபூ முஹை said...

ராகவன்! நீங்கள் அவசரப்பட்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.

தலாக், குலா இண்டுமே கணவன், மனைவி இருவரின் தன்னிச்சையாகவே நடக்கிறது. திருமணத்தின் போது ஊரறியப் பெற்றுக் கொண்ட மஹர் தொகையை, மணவிலக்குப் பெற நாடும் மனைவி அதே ஊரறிய மஹர் தொகையைத் திரும்ப செலுத்த வேண்டும். இந்தக் காரணத்துக்காகவே குலாவைத் தேர்ந்தெடுக்கும் மனைவி தலைவரிடம் தனது மணவிலக்கைப் பற்றித் தெரிவிக்கிறார் - வாங்கிய மஹரை தலைவரிடம் ஒப்படைக்கிறார். இதுதான் குலாவின் ஏதார்த்தம்.

இது தலைவரை நடுவராக ஏற்றுக் கொண்டதாகாது. இவர்களின் வாழ்க்கை ஓப்பந்தம் பதிவு செய்யப்பட்ட திருமணப் புத்தகத்தில், குலா மூலம் இத்திருமணம் ரத்தாகிவிட்டது என்பதைக் குறிப்பிடுவதற்காக - அதுபோல் தலாக் சொல்லி தவணைகள் முடிந்து விவாகரத்து உறுதி செய்யப்பட்டால் கணவன் அதைத் தலைவருக்கு தெரிவித்தாக வேண்டும். இதுவும் இவர்களின் திருமணம் பதிவு செய்யப்பட்ட புத்தகத்தில், தலாக் மூலம் இந்தத் திருமணம் ரத்தாவிட்டது என்பதைக் குறிப்பிடுவதற்காக.

எனவே தலாக், குலா இரண்டிலும் நடுவர் என்பது கிடையாது - இனிமேல் சேர்ந்து வாழ இயலாது என்று பிரிந்திட முடிவுவெடுக்கும் கணவன், மனைவி இருவருமே தலாக் - குலாவை சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் இதில் நடுவராக எவரும் தலையிட முடியாது - தலையிடக்கூடாது.

இங்கு நாம் பரிசீலித்துக் கொண்டிருப்பது தலாக்கும், குலாவும் உரிமையில் சமமாக இருக்கிறதா? என்பதைப் பற்றி மட்டுமே. அதில் வேறுபாடு இல்லை என்பது தெளிவு.

பொதுவாக, எப்படி சட்டம் இயற்றினாலும் அது பற்றிய மனிதனின் சிந்தனையில் எழும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முடியாது. தலாக், குலாவுக்கு நடுவர் இருந்தால் நல்லது என்பது ராகவனின் கருத்து.

செய்து கொண்ட ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள நடுவரை ஏற்படுத்திக் கொள்வது ஓப்பந்த முறைக்கேப் புறம்பானது மட்டுமல்லாமல் தலாக், குலா சுதந்திரத்தை, நடுவர் என்ற பெயரில் மூன்றாவது மனிதரிடம் ஒப்படைப்பது தவறு என்பது என்னுடைய கருத்து.

//*ஆனால் தலாக் பற்றிய கேள்விக்கு ஒன்றும் சொல்லவில்லை.*//

தலாக் பற்றிய உங்கள் கேள்விக்கு ஏற்கெனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது!

dondu(#11168674346665545885) said...

சலாஹுத்தீன் அவர்களே, எனக்கு இங்கு சில சந்தேகங்கள் உண்டு. மெஹர் என்பது பெண்ணுக்கு திருமணம் முன்பே கொடுத்து விடுகிறார்களா அல்லது கொடுத்ததாகக் கூறி அதன் கட்டுப்பாடு கணவனிடமே உள்ளதா. இஸ்லாமிய ஆண்கள் வரதட்சினையே பெருவதில்லையா? எது அதிகம்? மெஹரா வரதட்சிணையா? மெஹரைத் திருப்பித் தர சொல்பவர்கள் வரதட்சிணைக்கும் அவ்வாறே கூறுவார்களா? நான் படித்த செய்தி ஒன்றில் குலாவுக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் சம்மதம் தெரிவிக்காது தலைவர் தன்னை படுத்துவதாக ஒரு இஸ்லாமியப் பெண் கூறியிருந்தார். அதற்கு அப்பெண் செய்யக்கூடியது என்ன? நீதிமன்றத்துக்கு போக முடியுமா? அதற்கும் அவர் சார்ந்த சமூகத்தின் கட்டைப் பஞ்சாயத்து விடவில்லை என்றும் படித்தேன். எதற்கு வம்பு? பேசாமல் இரு பாலருக்கும் ஒன்று போலவே உரிமை கொடுத்து விடுவது சிறந்ததல்லவா?
மேலும் நீங்கள் சொல்லும் பெண்களுக்கான உரிமைகள் ஏட்டளவிலேயே உள்ளன. இதே நிலை மற்ற மதங்களில்தான் என்றாலும் அங்கெல்லாம் அவை தவறு என்றும் மாற்றப்பட வேண்டியவை என்பதும் ஆட்சேபக் குரல்களில் வெளியிடப்படுகின்றன. ஆனால் இஸ்லாமிய மதத்திலோ ஒரு மாற்றமும் தேவையில்லை என்ற ஒரு காப்ளசென்ட் மனப்பான்மை தென்படுகிறது. இது ஆரோக்கிய மனப்பான்மை என்று நினைக்கிறீர்களா?
இப்போது விபசாரத்துக்கு வருவோம். வயது வந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தங்கள் விருப்பத்திற்கிணங்க சேருகின்றனர். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதில் மதம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? அதுவும் கல்லடிகள் டூ மச். கசையடிகள் கொடுக்கலாம் இன்னொருவர் திருவாய் மலர்ந்தருளுகிறார். என்ன இதெல்லாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

Salahuddin said...

டோண்டு அவர்களே! உங்கள் கேள்விகளுக்கு நன்றி. அவை அனைத்திற்கும் விரிவாக பதில் எழுத விரும்புகிறேன். வேலை மிகுதியினால் உடனடியாக எழுத முடியவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ்.

- சலாஹுத்தீன்

நல்லடியார் said...

டோண்டு சார்,
மஹர் பற்றிய உங்களின் கேள்விக்கு எனது கருத்தையும் பதியவிரும்புகிறேன்.

பெரும்பாலான முஸ்லிம்கள் மஹர் என ஒரு சிறிய தொகையை பகிரங்கமாகக் கொடுத்துவிட்டு, வரதட்சினையாக அதைவிட அதிக தொகையை 'கறந்து' விடுகிறார்கள். அதுவும் ஆசிய முஸ்லிம்களிடமே இப்பழக்கம் உள்ளது. இது அவ்வாறு செய்யும் தனிப்பட்ட நபரின் தவறுதானே தவிர,மதத்தின் தவறல்ல.

கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது. அத்தகைய பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனிதாபிமானமுள்ள யாரும் உதவலாம். துரதிஷ்டவசமாக, அத்தகைய சில முஸ்லிம் பெயர் தாங்கிகளால் இஸ்லாம் விமரிசிக்கப் படுவதுதான் கொடுமை.

//வயது வந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தங்கள் விருப்பத்திற்கிணங்க சேருகின்றனர். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதில் மதம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?//

உங்களின் கருத்து எனக்கு வியப்பைத் தருகிறது!

G.Ragavan said...

////வயது வந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தங்கள் விருப்பத்திற்கிணங்க சேருகின்றனர். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதில் மதம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?//

உங்களின் கருத்து எனக்கு வியப்பைத் தருகிறது! ////

நல்லடியார். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் கூடுகிறார்கள். அது படித்த மட்டத்தில் நடக்கும் பொழுது பரிசுப் பொருட்களாகப் பரிமாற்றம். ஏழைகளிடத்தில் பணமாகப் பரிமாற்றம். அவ்வளவே. இதில் மதம் எங்கிருந்து வந்தது? விபச்சாரத்தை சட்ட பூர்வமாக்குவதுதான் சிறந்தது. அது பல இன்றைய பிரச்சனைகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும்.

G.Ragavan said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி அபுமுஹை.

வரதட்சணை என்ற கொடுமை ஒழிய வேண்டும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

அப்படியே இந்த மெஹர் பற்றிச் சொல்லுங்களேன். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

என்னுடைய இஸ்லாமிய நண்பன் மூலம் அடியார் என்பவர் எழுதிய "என் இனிய இஸ்லாம்" என்ற புத்தகம் கிடைத்தது. அதில் இந்த மெஹரைப் பற்றி விளக்கமாக இல்லை. அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன். மேலும் அந்த நண்பர் தமிழில் குரான் கிடைக்கிறது என்றும் அதை எனக்கு அவரே தருவதாகவும் கூறினார். நண்பர் தமிழர் இல்லையென்பதால் இரண்டு வாரம் அவகாசம் கேட்டிருக்கிறார். ஒருவேளை அதில் விளக்கமாகக் சொல்லப் பட்டிருக்கலாம்.

பாபு said...

நல்ல கேள்விகள். நல்ல விளக்கங்கள். நயத்தகு நன்றிகள்.

வெற்றிகரமான ஒரு விவாதத்தை இங்கு பார்க்கிறேன். மகிழ்சி.நானும் நிறையத் தெரிந்துக்கொள்வதால்.

அபூ முஹை said...

//*அப்படியே இந்த மெஹர் பற்றிச் சொல்லுங்களேன். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.*//

வரதட்சணை வாங்காதீர்கள் என்பதையும் தாண்டி, மஹர் என்ற மணக்கொடையை ஆண்கள் பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது இஸ்லாம். இதையறியாத முஸ்லிம்களிலுள்ள ஆண்வர்க்கம் மானமிழந்து பெண்களிடம் வரதட்சணைக்காகக் கையேந்தி நிற்கின்றனர்.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள மஹர் உரிமையை இந்தியா போன்ற நாடுகளில் பெண்களும் பயன்படுத்திக் கொள்ளவில்லை, ஆண்களும் கண்டு கொள்ளாமல் வசதியாக மறைத்து விட்டார்கள்.

''நீங்கள் பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை) களை மகிழ்வோடுக் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஏதெனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (திருக்குர்ஆன், 4:4)

இந்த வசனத்தை ஒருமுறைக்கு பலமுறைப் படித்துப் பாருங்கள் - மணப்பெண்ணுக்கு, மணமகன் என்பவன் மணக்கொடை வழங்க வேண்டும் என்பதை, மேலதிகமாக எவருடைய விளக்கமும் தேவையில்லாத அளவுக்கு நேரடியாகவே விளங்கிக் கொள்ளலாம்.

இல்லற வாழ்க்கையில் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதால் மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கே வழங்கியுள்ளது.

இன்று முஸ்லிம்களிடையே நடைமுறையிலிருக்கும் 101 அல்லது 1001 ரூபாய் என்று புத்தகத்தில் எழுதிக்கொள்ளும் மஹர் தொகையை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. மணப்பெண்தான் மஹர் தொகையை நிர்ணயிக்க வேண்டும். இதில் மற்றவரின் குறுக்கீடுகள் இருக்கக்கூடாது.

உமர் (ரலி) ஆட்சி காலத்தில் பெண்கள் மஹர் தொகையை அதிகமாகக் கேட்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது ஆட்சித் தலைவராக இருந்த உமர் (ரலி) அவர்கள் மஹர் தொகையை அதிகரிக்கும் பெண்களின் செயலைக் கண்டிக்கும் வகையில் ''இனிமேல் மஹராக நாம் ஒரு தொகையை நிர்ணயிப்போம்'' என்று கூறினார். இதைக் கண்டித்து ஒரு பெண்மணி ''மஹர் தொகையை அல்லாஹ்வே நிர்ணயிக்காத போது அதை நிர்ணயிப்பதற்கு நீங்கள் யார்? என்று கேட்டார். உடனே உமர் (ரலி) அவர்கள் இறைவனுக்கு நன்றியைச் செலுத்தி மஹர் தொகையை நிர்ணயிக்குபடி போடுவதாகச் சொன்ன சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

திருமணத்திற்குப்பின் கணவனால் கைவிடப்படுவோம் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டே ஒரு பெண் மஹர் தொகையைத் தீர்மானிக்க வேண்டும். பெண்களின் வசதிகளின் ஏற்றத் தாழ்வைக் கொண்டு தொகை பல ஆயிரங்களிலிருந்து சில லட்சங்கள் வரை மஹர் தொகையாகப் பெற்றுக் கொள்ளலாம், பெற்றுக் கொள்ளும் தொகையை பணமாகவோ, தங்கமாவோ தன்னிடமே வைத்துக்கொள்ளலாம், அல்லது ஏதேனும் தொழிலில் முதலீடு செய்து லாபம் மீட்டலாம்.

முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப் போன வரதட்சணை என்பது இஸ்லாம் ஏற்படுத்தியதல்ல. வரதட்சனையாக சல்லிக்காசு பெறாமல், பெண்களுக்கான மஹர் - மணக்கொடையைக் கொடுத்து மணமுடிக்க வலியுறுத்துகிறது இஸ்லாம். இங்கே மாற்ற வேண்டியது சட்டத்தையல்ல! - வரதட்சணையில் சொகுசு கண்ட மனிதர்களே மாற வேண்டும்! என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம்.

(மஹர் - விரிவாக எழுத வேண்டிய விஷயம் பின்னூட்டத்திற்காக சுருக்கியே விளக்கியுள்ளேன் மேலும் விளக்கம் தேவைப்பட்டால் எழுதவும் நன்றி!)

தமிழ் குர்ஆன் இந்த சுட்டியில் பெறலாமே!

http://www.tamililquran.com/suraindex.asp

அன்புடன்
அபூ முஹை

contivity said...

மிக கண்ணியமான முறையில் விவாதிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி..

காழ்ப்புணர்ச்சி, விதண்டாவாதம் நாகரீகமின்மை இவற்றையே மூலதனமாக வைத்து சிலர் எழுதிவரும் அவதூறுகளை அனைத்து அன்பர்களும் புரிந்து கொண்டு புறந்தள்ள வேண்டும்.

அபூமுஹை அவர்கள் கூறியது போல சில இஸ்லாமிய பெயர் தாங்கிகள் செய்யும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் இஸ்லாத்தையே களங்கப்படுத்த முனைவது அறிவீனம்.

ராகவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..

நல்லடியார் said...

டோண்டு சார்,

விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் இணைவதில், எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. எனினும், இங்கு தனி மனித சுதந்திரமா? ஒழுக்கமா என்று பார்க்கும் போது, ஒழுக்கத்தையே முன்னிறுத்துவோம்.

செக்ஸ் உணர்வு மிகுந்துவிட்டால் மகளுடனோ, தாயுடனோ அல்லது சகோதரியுடனோ புணர்வதில்லை.(மண்ணிக்கவும் வேறு உதாரணம் கிடைக்கவில்லை) இங்கும் நீங்கள் சொன்ன அதே கருத்து பொறுந்தும்தானே? எனினும் சமூக கட்டுப்பாடுகளும்,மனசாட்சியும்,உறவு முறைகளும் தடுக்கிறது. அந்த வகைதான் மதத்தின் குறுக்கீடும்.

மத கட்டுப்பாடுகள் சில சமயம் தனி மனித உரிமைகளில் தலையீடு செய்வது மாதிரி இருக்கும், ஆனால் அதில் சமூக நலனை முன்னிறுத்தி அத்தகைய சில குறுக்கீடுகள் அவசியமாகிறது.

மேலும், ஒருவன் தன் செக்ஸ் உணர்வை எந்தெந்த வகையிலெல்லாம் தீர்த்துக் கொள்ளலாமெனவும் இஸ்லாம் வரையறுத்துள்ளது. இது அனேகமாக எல்லா மதங்களுக்கும் பொது. இங்கு செக்ஸ் உணர்வு தடுக்கபடவில்லை என்பதை கவனிக்கவும்.

//விபச்சாரத்தை சட்ட பூர்வமாக்குவது தான் சிறந்தது. அது பல இன்றைய பிரச்சனைகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும்.//

உங்கள் கருத்துடன் நான் மாறுபடுகிறேன் ராகவன், இதே கோரிக்கையைத்தான் ஓரின சேர்க்கையாளர்களும் வைக்கிறார்கள். இதர குற்றவாளிகளும் இவ்வாறு கேட்கத் தொடங்கி விட்டால், சமூக அமைதி கெடாதா?

நன்றி.

நல்லடியார் said...

ஒருவனுக்கு செக்ஸில் திருப்தி கிடைக்காத போழ்து மணைவியை விடுத்து வேறு பெண்ணுடன் உறவு கொள்வது விபச்சாரம் என்கிறோம். அத்தகைய சூழலில் அவன் நான்கு மணைவியர் வரை (நால்வரையும் நீதமாக நடத்த முடியுமெனில் மட்டுமே) திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது செக்ஸை தனித்துக் கொள்ள உள்ள சட்டரீதியான அங்கீகாரம்தானே?

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வதை நான் விபச்சாரத்துடன் ஒப்பிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

Salahuddin said...

டோண்டு சார்,

உங்களின் கேள்விகளுக்கு அபூமுஹை, நல்லடியார் ஆகியோர் பதிலளித்திருந்தும் எனது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்கிறேன்.


//மெஹர் என்பது பெண்ணுக்கு திருமணம் முன்பே கொடுத்து விடுகிறார்களா அல்லது கொடுத்ததாகக் கூறி அதன் கட்டுப்பாடு கணவனிடமே உள்ளதா.//

மஹர் என்பது மணமகன் மணமகளுக்கு திருமணத்தின்போது பணமாகவோ, பொன் போன்ற பொருளாகவோ அளிக்கவேண்டிய ஒரு கட்டாயக்கடமை. இதன் தொகை அல்லது அளவை நிர்ணயம் செய்யும் உரிமையும் மணமகளுக்குத்தான் உண்டு. பொதுவாகவே, மனைவியின் சொத்துக்கள், பணம் (மஹர் தொகை உட்பட) ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் கணவனுக்கு கிடையாது, அந்த மனைவியே விரும்பி ஒப்படைத்தாலொழிய.

குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடையை) மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அத்தியாயம் 4: வசனம் 4)

இவையெல்லாம் இஸ்லாமிய திருமணச் சட்டங்களில் உள்ளவை. அவை எல்லா முஸ்லிம்களாலும் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியே!

//இஸ்லாமிய ஆண்கள் வரதட்சினையே பெருவதில்லையா?//

இந்த கேள்விக்கு 'இல்லவே இல்லை' என்று பதில் சொல்லால் அது உண்மையல்ல. இஸ்லாமிய திருமணச் சட்டங்களில் வரதட்சிணை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் நடைமுறையில் அவ்வாறல்ல என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை. நல்லடியார் குறிப்பிட்டதுபோல ஆசிய முஸ்லிமகளிடையே மட்டும்தான் இந்த பழக்கம் காணப்படுகிறது. ஆனால் ஒரு 10/15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையோடு ஒப்பிட்டால் தற்போது இத்தகைய மனப்போக்கு மாறிவருவதை காணலாம். இளைஞர்களிடைய ஒரு விழிப்புணர்வு தோன்றிவருவதையும் வரதட்சிணை இல்லா திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும்கூட நம்மால் உணர முடியும்.

எனது கருத்து என்னவெனில், இந்திய கண்ணோட்டத்தில் வரதட்சிணை என்பது ஜாதி, மதம் கடந்து வியாபித்திருக்கும் ஒரு சமூக கொடுமை. எல்லா சமூகத்தினரியேயும் ஒரு பரவலான விழிப்புணர்வு ஏற்படும்வரை இதை ஒழிக்க இயலாது.

//எது அதிகம்? மெஹரா வரதட்சிணையா?//

நடைமுறையில் மஹரை விட வரதட்சிணையே அதிகமானதாக இருக்கிறது. முஸ்லிம்களிடையே வரதட்சிணை எனும் பழக்கம் மறைந்துவரும் காலத்தில் மஹர் முக்கியத்துவம் பெரும்.

//மெஹரைத் திருப்பித் தர சொல்பவர்கள் வரதட்சிணைக்கும் அவ்வாறே கூறுவார்களா?//

வரதட்சிணை என்பது இஸ்லாமிய திருமணச்சட்டங்களில் இல்லாத ஒன்று என்பதால் இதற்கு சட்டபூர்வமான பதில் எதுவும் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனால் குர்ஆன் மஹரைப்பற்றி குறிப்பிடும்போது இவ்வாறு கூறுகிறது: "மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்தபோதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக்கொள்ளாதீர்கள் (அத் 4: வசனம் 20). இதன் அடிப்படையில் பார்க்கும்போது கொடுத்ததையே திரும்ப கேட்கக்கூடாது என்ற நிலையில் மணமகளிடமிருந்து பெற்ற ஒன்றை தானே வைத்துக்கொள்ள ஆசைப்படுவதும் கூடாதுதானே?

//நான் படித்த செய்தி ஒன்றில் குலாவுக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் சம்மதம் தெரிவிக்காது தலைவர் தன்னை படுத்துவதாக ஒரு இஸ்லாமியப் பெண் கூறியிருந்தார். அதற்கு அப்பெண் செய்யக்கூடியது என்ன? நீதிமன்றத்துக்கு போக முடியுமா? அதற்கும் அவர் சார்ந்த சமூகத்தின் கட்டைப் பஞ்சாயத்து விடவில்லை என்றும் படித்தேன்.//

மணவிலக்கிற்காக ஒரு பெண் தலைவரை அணுகினால், அவர் அத்தம்பதியினரிடையே சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம். அது நடக்காது என தெரியவந்தால் அவர் அப்பெண்ணுக்கு மணவிலக்கு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இதுதான் அவர் செயல்படக்கூடிய சாத்தியக்கூறுகள். ஐந்து வருடங்களுக்கு மேல் இழுத்தடிப்பது அநியாமே.

//எதற்கு வம்பு? பேசாமல் இரு பாலருக்கும் ஒன்று போலவே உரிமை கொடுத்து விடுவது சிறந்ததல்லவா?//

பிறிதொரு சந்தர்ப்பத்தில் இதுகுறித்து எழுதுகிறேன்.

//மேலும் நீங்கள் சொல்லும் பெண்களுக்கான உரிமைகள் ஏட்டளவிலேயே உள்ளன. இதே நிலை மற்ற மதங்களில்தான் என்றாலும் அங்கெல்லாம் அவை தவறு என்றும் மாற்றப்பட வேண்டியவை என்பதும் ஆட்சேபக் குரல்களில் வெளியிடப்படுகின்றன. ஆனால் இஸ்லாமிய மதத்திலோ ஒரு மாற்றமும் தேவையில்லை என்ற ஒரு காப்ளசென்ட் மனப்பான்மை தென்படுகிறது. இது ஆரோக்கிய மனப்பான்மை என்று நினைக்கிறீர்களா?//

முன்பே குறிப்பிட்டதுபோல் இஸ்லாமியச் சட்டங்களுக்கும் முஸ்லிம்களின் நடைமுறைக்கும் பெருமளவில் வேறுபாடு இருப்பது உண்மையே. ஆனால் மாற்றம் தேவைப்படுவது முஸ்லிம்களின் மனங்களில்தானே தவிர சட்டங்களில் அல்ல.

//இப்போது விபசாரத்துக்கு வருவோம்.//

இது குறித்த எனது கருத்தை பிறகு எழுதுகிறேன்.

- சலாஹுத்தீன்

G.Ragavan said...

// உங்கள் கருத்துடன் நான் மாறுபடுகிறேன் ராகவன், இதே கோரிக்கையைத்தான் ஓரின சேர்க்கையாளர்களும் வைக்கிறார்கள். இதர குற்றவாளிகளும் இவ்வாறு கேட்கத் தொடங்கி விட்டால், சமூக அமைதி கெடாதா? //

இது குறித்து அறிவியல் பூர்வமாக விளக்க எனக்குத் தகவல் பற்றாது. ஆனால் பொதுப்படையாகச் சொல்கிறேன்.

ஓரினச் சேர்க்கையோ ஈரினச் சேர்க்கையோ எதுவாயினும், இருவர் விரும்பிப் புணர்வது அவர்கள் விருப்பம். வன்புணர்ச்சியாகவும் அடுத்தவருக்கு இடைஞ்சலாக இல்லாத வகையிலும் நடந்தால் சரியே என்பது எனது கருத்து. இவர்களைக் குற்றவாளிகள் என்று என்னால் கருத முடியவில்லை. அது அவர்கள் விருப்பம்.

G.Ragavan said...

// ஒருவனுக்கு செக்ஸில் திருப்தி கிடைக்காத போழ்து மணைவியை விடுத்து வேறு பெண்ணுடன் உறவு கொள்வது விபச்சாரம் என்கிறோம். அத்தகைய சூழலில் அவன் நான்கு மணைவியர் வரை (நால்வரையும் நீதமாக நடத்த முடியுமெனில் மட்டுமே) திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது செக்ஸை தனித்துக் கொள்ள உள்ள சட்டரீதியான அங்கீகாரம்தானே?
//

சரி. ஆணுக்கு மட்டும்தான் ஒருவருடன் செக்ஸில் திருத்தியில்லாமல் போகுமா? ஒரு பெண்ணுக்கு அந்தத் திருப்தியின்மை வந்தால்?

நல்லடியார் said...

ராகவன், 'திருப்தியின்மை' என நான் சொன்னது என் தெளிவற்ற விளக்கம் என நினைக்கிறேன்.

ஆணோ,பெண்ணோ ஒருவரை ஒருவர் திருப்தி படுத்த முடியாத பட்சத்தில் விவாக ஒப்பந்தம் தொடர்வதில் அர்த்தமில்லை. இதற்கு ஒரே தீர்வு, விவாக விலக்கு பெறுவதுதான்.

நடைமுறை சிக்கலைத் தவிர்க்க, மணைவியின் அனுமதியுடன் ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அனுமதி (நான்குவரை) உண்டு. இங்கு மணைவி அனுமதிக்காத பட்சத்தில் அந்த வழியும் இல்லை.

வாய்ப்பு கிடைத்தால் பலதாரமணம் விஷயத்தில் ஆண்-பெண் பேதம் பற்றி பிறகு விவாதிப்போம்.

நான் முழுதும் இஸ்லாத்தை அறிந்தவன் அல்ல. தங்கள் போன்றோருக்கு விளக்குவதன் மூலம் நானும் தெளிவடைகிறேன். என் கருத்துக்களை இஸ்லாமிய சட்டங்களுடன் ஒப்பிட்டு, அதில் என் தவறு இருப்பின், அதனை திருத்திக் கொள்வதில் எனக்கு தயக்கமில்லை.

நன்றி.

G.Ragavan said...

நல்லடியார்.....நான் அறிந்து கொள்ளவே கேள்வியைக் கேட்டேன்.

என்றைக்குமே நாம் கற்றது கைமண்ணளவுதான் நல்லடியார். உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள். கேட்டுக் கொள்கிறேன்.

இஸ்லாம் பெண்களுக்குப் பலதார மணத்தை எதிர்க்கிறது என்று சொல்லி முடிப்பது அல்ல எனது நோக்கம். இது பெரும்பாலும் எல்லா மதங்களிலும் பார்க்கும் பண்பு. பாஞ்சாலியை ஒத்துக் கொண்ட சமுதாயம் வேறொரு பெண்ணை அப்படி ஒத்துக் கொள்ளாது. இது நம்ம ஊர்ப் பிரச்சனைதான். அதையும் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.

சரி. நீங்கள் விரும்பிய வகையில் பிறகே விவாதிப்போம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Salahuddin said...

டோண்டு சார்,

//இப்போது விபசாரத்துக்கு வருவோம். வயது வந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தங்கள் விருப்பத்திற்கிணங்க சேருகின்றனர். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதில் மதம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? அதுவும் கல்லடிகள் டூ மச். கசையடிகள் கொடுக்கலாம் இன்னொருவர் திருவாய் மலர்ந்தருளுகிறார். என்ன இதெல்லாம்//

நான் புரிந்துகொண்டது சரி என்றால், இதில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன. (1) இஸ்லாமிய தண்டனை முறைகள் மிக கடுமையானவை (டூ மச்). (2) விபச்சாரம் என்பது ஒரு தண்டனைக்குறிய குற்றமே அல்ல. இந்த இரண்டிற்குமே பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.

பொதுவாகவே இஸ்லாமிய சட்டங்கள் சமூக நலனை அடிப்படையாகக் கொண்டவை. சமூக நலனின் அடித்தளம் குடும்ப அமைப்பு என்பதும் இஸ்லாத்தின் கொள்கை. ஒரு செயல் அல்லது குற்றம் எந்த அளவுக்கு சமூக நலனை சீர்குலைப்பதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தண்டனைகளும் கடுமையாகவே இருக்கும். உதாரணத்திற்கு சொல்வதானால், போதைப்பொருள் கடத்துவோருக்கு சிங்கப்பூரில் மரணதண்டனை வழங்கப்படுவதை குறிப்பிடலாம். மேம்போக்காக பார்த்தால் இது ஒரு சாதாரணமான குற்றமாகத்தான் தெரியும். 'இவன் கொண்டு வந்து விக்கிறான். போதைக்கு அடிமையான சிலபேரு வாங்கி உபயோகிக்கிறான். இது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?' என்று கூட கேட்கலாம். ஆனால் சற்று கவனித்துப்பார்த்தால் நமக்கு உண்மை புரியும். போதைப்பொருள் இலகுவாக கிடைக்கத்தொடங்கினால் அது ஒரு தலைமுறையையே சீர்கெடுத்துவிடும். கடுமையான தண்டனையைக் கொண்டுதான் இதை தடுக்க முடியும் என்றால், சமூக நலனை கருத்தில் கொண்டு அவ்வாறு செய்வதில் தவறொன்றுமில்லை.

விபச்சாரம் என்பது நீங்கள் சொல்வது போல் ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் விருப்பத்திற்கினங்க சேரும் செயலாகத்தெரியவில்லை. முக்கியமாக அதில் அந்தப்பெண்ணின் விருப்பம் இருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி. விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களின் பேட்டிகள், உண்மைச்சம்பவங்கள் ஆகியவற்றை படித்தால் அவை பெரும்பாலும் கண்ணீர்க்கதைகளாகவே இருக்கின்றன. அப்பாவி பெண்களை கடத்திச்சென்றோ, கட்டாயப்படுத்தியோ விபச்சாரத்தில் ஈடுபடச் செய்த கதைகளை நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கிறோம். அல்லது சில பெண்களே வறுமையின் காரணமாகவோ, சூழ்னிலையின் காரணமாகவோ இத்தகைய இழி நிலைக்கு ஆளான செய்திகளையும் காண்கிறோம். 'சும்மா ஜாலிக்காக' இதில் ஈடுபடும் பெண்களும் இருக்கிறார்கள்தான்.

விபச்சாரம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஊர்களில் கூட அதில் ஈடுபடும் எல்லா பெண்களும் தங்கள் விருப்பப்படிதான் இதில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லமுடியாது. அங்கீகரிப்பட்ட தொழிலாக இருந்தாலும் இது எக்காலத்திலும் ஒரு கௌரவமான தொழிலாக ஆகாது. இதில் நிறைய வருமானம் கிடைக்கும் என்பதற்காக எந்த பெண்ணாவது ' நான் வளர்ந்து ஆளான பிறகு இந்தத் தொழிலில் ஈடுபடப்போகிறேன்' என்றோ, எந்தப் பெற்றோராவது 'என் மகளை வளர்த்து இந்த தொழிலில் ஈடுபடச்செய்வேன்' என்றோ கனவு காண்பதில்லை.

ஆக, சில சபலம் பிடித்த ஆண்களின் இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்காக பல பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கும் பரிதாபம்தான் விபச்சாரம். அந்தப்பெண்கள் தங்கள் இளமையைத் தொலைத்த பிறகு அவர்களை யார் கவனிப்பார்கள்.? அவர்களுக்கென குடும்பமோ, குழந்தைகளோ இல்லாத நிலையில் அவர்களின் கதி என்ன?

விபச்சாரம் மலிந்து கிடக்கும் இடத்தில் திருமணங்களின் எண்ணிக்கை குறையும். சமூக சீர்கேடுகள் பெருக வாய்ப்பு உருவாகும். குடும்ப அமைப்பே சீர்குலையும். ஒட்டு மொத்த சமுதாய நலனும் கேள்விக்குறியாகும்.

அதனால்தான் இஸ்லாம், திருமண பந்தத்தை ஊக்குவித்து விபச்சாரத்தை தூண்டும் எல்லாவழிகளிலும் தடைக்கற்களை போட்டு வைத்துள்ளது. அவற்றையும் மீறி அதில் ஈடுபடுபவர்களை கடுமையான தண்டனைகளைக்காட்டி எச்சரிக்கிறது.

- சலாஹுத்தீன்

நல்லடியார் said...

நன்றி சலாஹுதீன்,

விபச்சாரம் பற்றி எனக்குத் தெரிந்து இதைவிட எதார்த்தமாக சொல்ல முடியாது.

இதுவல்லாமல் எனது பதிவில், மகளை கெடுத்து 3 குழந்தைகளைப் பெற்றவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டதை குறிப்பிட்டு, இது நியாயமான தண்டனையா? என கேட்டு, தனி மனிதனின் குற்றங்களை அவன் மதத்துடன் இணைத்து விமரிசிக்கக் கூடாது (எல்லாம் மதம் படுத்தும் பாடு என்று காஞ்சி பிலிம்ஸ், ஒரு சம்பவத்துடன் மதத்தை இணைந்து விமரிசித்திருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டி) எனது கண்ணோட்டத்தை எழுதி இருந்தேன்.

இதற்கு இடப்பட்ட பின்னூட்டங்களில், சமீபத்தில் இம்ரானா என்ற மருமகளை கற்பழித்த மாமனாருக்கு தேவ் பந்த் உலமாக்கள் அநீதியான தீர்ப்பு வழங்கியதையும் பற்றிய விவாதம் எழுந்தது. அதைப்பற்றியும் இங்கு விவாதித்தால் நன்று என நினைக்கிறேன்.

குர்ஆனிலும் ஹதீஸிலும் மிகத்தெளிவாக திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்களைப் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் கற்பழிப்புக்கும் மிக மிக தெளிவான தண்டனை குறிப்பிடப் பட்டுள்ளது. எனினும், தேவ் பந்த் உலமாக்கள் எவ்வாறு அந்த பெண்ணைக் கெடுத்த மாமனாருக்குத் திருமணம் செய்து வைக்க தீர்ப்பு வழங்கினார்கள்?

Dondu அவர்கள் கேட்பது போல், கற்பழித்தவனுக்கு 'லட்டு' போல பெண்ணையும் அல்லவா கொடுத்தீர்கள் என்பதற்கு இஸ்லாமிய வழியில் என்ன விளக்கம் சொல்வது?

என்னைப் பொறுத்தவரை, இந்த தீர்ப்பு ரொம்பவும் துரதிஷ்டவசமானது. முதலில் கற்பழித்தவனை, அதற்கு இஸ்லாம் பரிந்துறைத்துள்ள தண்டனை வழங்க அனுமதித்திருந்தால், மேற்கொண்டு விவாதமே தேவை இல்லை.

அநீதி இழைக்கப் பட்ட பெண்ணை, அநீதி இழைத்தவனுக்கே பரிசாக கொடுப்பது எனக்கு இஸ்லாமிய வழியாகப் படவில்லை.

எனினும், சில உலமாக்களும், இஸ்லாமிய பெண்கள் அமைப்பும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருவது ஆறுதலாக இருக்கிறது. இதையும் இஸ்லாத்தை கண்ணை மூடிக்கொண்டு விமரிச்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அபூ முஹை said...

நல்லடியார், ஸலாஹூத்தீன், விபச்சாரம் பற்றி இருவரும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக எழுத வேண்டும். இது பற்றி நானும் என் கருத்தை பதிக்கிறேன் (இன்ஷா அல்லாஹ்)

நல்லடியார்!
இஸ்லாத்திற்கெதிரான தேவ்பந்த் உலமாக்களின் தீர்ப்பைப் புறக்கணியுங்கள், கற்பழித்தவனுக்கு மரண தண்டனையும் - திருமணம் செய்யத்தகாத உறவைத் (தெரிந்தே) திருமணம் செய்தால் அதற்கும் மரண தண்டனைதான். மகனின் மனைவி தந்தைக்கு மணமுடிக்க விலக்கப்பட்டவள். இன்ஷா அல்லாஹ் இது பற்றி விரிவாக அலசுவோம்.

அன்புடன்,
அபூ முஹை

நல்லடியார் said...

//இஸ்லாத்திற்கெதிரான தேவ்பந்த் உலமாக்களின் தீர்ப்பைப் புறக்கணியுங்கள்//

மனிதர்களில் தவறிழைபவர்கள் உண்டு. இதில் உலமாக்கள் விதிவிலக்கல்ல. இதையே காரணமாக வைத்து, இஸ்லாமிய சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற கோஷங்களும் எழும்பியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேவ்பந்த் தீர்ப்பு ஒன்றும் திருத்த முடியாத தீர்ப்பாக எனக்குப் படவில்லை. எனினும் உங்கள் விளக்கத்தையும் அறிய ஆவல்!

கற்பழித்தவனுக்கு இஸ்லாமிய தண்டனையை பரிந்துறைத்திருந்தாலும், அது விமரிசிக்கப் படும். ஆக மொத்தத்தில் உலக்கைக்கு ஒரு பக்கம் அடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி கதைதான் போங்க!

Salahuddin said...

//மருமகளை கற்பழித்த மாமனாருக்கு தேவ் பந்த் உலமாக்கள் அநீதியான தீர்ப்பு//

தேவ்பந்த் உலமாக்கள் எதன் அடிப்படையில் இத்தகைய தீர்ப்பை வழங்கினார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாத புதிராக உள்ளது.

- சலாஹுத்தீன்

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...